Skip to content
Home » அதிமுக-பாஜக கூட்டணி…. நாளை நல்ல முடிவு வரும்…. கிருஷ்ணசாமி பேட்டி

அதிமுக-பாஜக கூட்டணி…. நாளை நல்ல முடிவு வரும்…. கிருஷ்ணசாமி பேட்டி

  • by Senthil

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி  சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது… அதிமுக முடிவால் பாஜக தேசிய தலைமை அப்செட்டில் உள்ளது. அதிமுக- பாஜக கூட்டணி முற்றுப் பெறவில்லை. அதிமுக – பாஜக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது, இன்று அல்லது நாளை நல்ல முடிவு வர வாய்ப்பு உள்ளது. தற்போதைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டாலும் 5 மாநில தேர்தலுக்கு பின் கூட்டணி புதுப்பிக்கப்பட வாய்ப்பு உள்ளது .

சாதி வாரி கணக்கெடுப்பை புதிய தமிழகம் ஆதரிக்கவில்லை, இது மக்களை பிளவுபடுத்தக்கூடிய தவறான நடைமுறை. இடஒதுக்கீடு மூலம் மட்டுமே தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு நல்ல வாழ்க்கையை கொடுக்க முடியாது. தூய்மையான அரசால் மட்டுமே எந்தவித பேதமும் இல்லாத சமுதாயத்தை உருவாக்க முடியும். சாதிவாரி கணக்கெடுப்பு முறை நாட்டு மக்களை பின்னோக்கி இழுத்துச் செல்லும் . இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!