திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்படட் திருவெறும்பூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பனையக் குறிச்சி, குவளக்குடி, வேங்கூர், நடராஜபுரம், அரசங்குடி, கிளியூர், பத்தாளப் பேட்டை ,கிருஷ்ண சமுத்திரம், ஆகிய இடங்களில் அதிமுக சார்பில்
வாக்குச் சாவடி பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
பூத் கமிட்டியின் மகளிர் குழு, இளைஞர்- இளம்பெண்கள் பாசறை ஆகிய அமைப்புகளின் நோட்டுகளை பூத் கமிட்டி அதிமுக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் செம்மலை ஆய்வு செய்தார். அப்போது
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் எம்.பியுமான ப.குமார் உடனிருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் எஸ்.கே. டி. கார்த்திக் ,மாவட்ட பொருளாளர் நெட்ஸ் இளங்கோ, மாவட்ட கழகத் துணைச் செயலாளர் ,சுபத்ரா தேவி ,மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சாந்தி, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கணேசன் ,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சூரியூர் ராஜாமணிகண்டன் மாவட்ட மகளிர் அணி செயலாளர் செல்வி மேரி ஜார்ஜ் ,மாவட்ட அமைப்பு செயலாளர் ஓட்டுனர் செயலாளர் S.பாஸ்கர், மாவட்ட கலை பிரிவு செயலாளர் எம்.பி. ராஜா, முன்னாள் ஊராட்சி செயலாளர் பாலமூர்த்தி, திருவெறும்பூர் ஒன்றிய கவுன்சிலர் த.முருகா, வடக்கு ஒன்றிய கழக அவைத்தலைவர் அண்ணாதுரை மற்றும் கிளைக் கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள், செயல்வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.