Skip to content
Home » திருச்சியில் அதிமுக தோ்தல் அறிக்கை குழு…. மா. செ. குமார் 25 பக்க அறிக்கை தாக்கல்

திருச்சியில் அதிமுக தோ்தல் அறிக்கை குழு…. மா. செ. குமார் 25 பக்க அறிக்கை தாக்கல்

  • by Senthil

மக்களவை  தேர்தலுக்காக அதிமுக தனி கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது. எனவே அதிமுக சார்பில் மக்களவை தேர்தலுக்காக ஒரு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளது. இந்த தேர்தல் அறிக்கை தயார் செய்வதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு குழு அமைத்துள்ளார். அந்த குழுவின் தலைவராக  முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்பு  செயலாளருமான  நத்தம் விஸ்வநாதன் உள்ளார். குழுவில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார்,  செம்மலை,  வைகை செல்வன்,  உதயக்குமார், வளர்மதி , பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் உள்ளனர்.

இந்த குழு தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்து மக்களின் கருத்துக்களை கேட்டு  வருகிறது. திருச்சி வந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை,  திருச்சி  புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பியுமான  ப. குமார் சந்தித்து பேசினார்.மத்திய அரசு சார்ந்து தீர்க்கப்பட வேண்டிய  டெல்டா மாவட்ட மக்கள், குறிப்பாக   திருச்சி  மாவட்ட மக்கள் பிரச்சனைகள் குறித்த 25பக்கங்கள் கொண்ட அறிக்கையை  அவர் குழுவிடம் வழங்கி அவற்றை தேர்தல் அறிக்கையில் சேர்க்கும்படி கோரிக்கை விடுத்தார்.  அதனை பெற்றுக்கொண்ட குழுவினர்  நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!