அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, அரியமங்கலம் நேருஜி நகர் அருகில் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர் ச.கல்யாணசுந்தரம் , திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் .. மற்றும் தலைமை கழக பேச்சாளர் டிகே.துரைசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். பொன்விழா கண்ட அதிமுக வரலாற்றினையும், தொகுதிக்கு எந்த நன்மையும் செய்யாத அமைச்சர் மகேசை கண்டித்தும்கூட்டத்தில் பேசினர்.
கூட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் அனைவரும் திரளாக பங்கேற்றனர்.