அதிமுக பொதுக்குழு செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் தமிழகம் முழுதும் அதிமுகவினர் இதனை கொண்டாடும் வகையில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒ.பன்னீர் செல்வம் பொதுக்குழுவை எதிர்த்து தாக்கல் செய்த மனு
செல்லாது என்றும் அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிருப்பதை அடுத்து எம்ஜிஆர் இளைஞர் அணி திருச்சி மாவட்ட செயலாளர் முத்துக்குமார் தலைமையில் அண்ணா சிலை அருகே அதிமுகவினர் ஒன்று கூடி அண்ணாவின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர் .