திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் நேற்று திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட துவாக்குடி உள்பட ஐந்து இடங்களில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
துவாக்குடி நகர அதிமுக செயலாளர் பாண்டியன் (65) இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள் எம்.பி. குமார், திருச்சி பாராளுமன்ற அதி்முக வேட்பாளர் கருப்பையா ஆகியோர் தண்ணீர் பந்தலை திறந்து வைக்க இருக்கிறார்கள். எனவே அந்தப் பகுதிகளில் பிளீச்சிங் பவுடர் போடும்படி நகராட்சி ஊழியரான அய்யம்பட்டி ஜார்ஜ் பாக்யராஜ் ( 43 ) என்பவரிடம் பாண்டியன் கூறினார்.
அதற்கு ஜார்ஜ் பாக்யராஜ், எப்படி என்னிடம் பிளீச்சிங் பவுடர் போட சொல்லலாம் என கூறி பாண்டியனை ஆபாச வார்த்தையால் திட்டி கையால் தாக்கியதோடு கொலை மிரட்டலும் விடுத்தாராம். இது சம்பந்தமாக பாண்டியன் துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.