திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய அலுவலகத்தில் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. வருகின்ற 16 ந்தேதி திருவெரும்பூர் பகுதியில் அதிமுக நிறுவனர் எம்.ஜீ.ஆர் திருவுருவசிலையை திறந்து வைக்க வருகை தரும் கழக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்,முன்னால் முதல்வர், எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்பளித்து விழாவினை சிறப்பிக்க வேண்டி திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னால் எம்பியுமான ப.குமார்
வழிகாட்டுதல்படி புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஒன்றிய அவைத் தலைவர் ஜெயக்குமார், ஒன்றிய துணை செயலாளர்பாண்டியன்,ஒன்றிய துணை செயலாளர் திருமதி பிச்சைமணி, மாவட்ட பிரதிநிதி .மருதமுத்து, ஒன்றிய கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன்,ஜெனிபர் ஜெனிவா ஹென்றி பிரபாகரன், கூட்டுறவு சங்க தலைவர் காமராஜ்,பன்னீர்செல்வம்,திருமதி சுமதிமணி ஒன்றிய கழக it wing செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய,கிளை கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.