Skip to content
Home » நாளை அனைத்து கட்சி கூட்டம்…..மத்திய அரசு ஏற்பாடு

நாளை அனைத்து கட்சி கூட்டம்…..மத்திய அரசு ஏற்பாடு

  • by Senthil

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை மறுநாள் தொடங்கி  பிப்ரவரி 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் அரசு முழு அளவிலான பட்ஜெட்டை  தாக்கல் செய்யும். நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கி வைக்க உள்ளார். நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறையாற்றிய பின் அவர் தொடங்கி வைக்க உள்ளார். நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி பட்ஜெட்டில் முக்கியமான சலுகைகள் இடம்பெறலாம் என்பதால் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்தநிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது  குறித்து ஆலோசிக்க  பாஜக அரசு நாளை அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!