தஞ்சாவூர் அருகே சமுத்திரம் ஏரியில் புதிதாக அமைக்கப்பட்ட பூங்காவை இன்று திறந்து வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,” குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த முடியாது எனக் கூறுவதற்கு மாநில அரசுக்கு உரிமை கிடையாது என அமித்ஷா கூறியுள்ளார். மாநில உரிமையைப் பறிப்பதற்கு அவர்கள் எந்த அளவுக்கு பாசிசத்துடன் நடந்து கொள்கின்றனர் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. தமிழக முதல்வர் முதலமைச்சர் என்பதைத் தாண்டி ஜனநாயக பாதுகாவலராக உள்ளார்”என்றார்.