Skip to content

ஆனைமலை புலிகளுக்கு காப்பகம்… 2ம் கட்ட தாவர உண்ணிகள் கணக்கெடுப்பு தீவிரம்

ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட ஆறு வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது இதில் 64 நேர்கோட்டு பாதைகள் அமைக்கப்பட்டு வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் ஆனைமலை புலிகளுக்கு காப்பகம் பொள்ளாச்சி வனச்சிறக்க பகுதிக்கு உட்பட்ட மணியன் சோலை வனப்பகுதியில் மூன்று நாட்கள் மாமிச உண்மைகள் மற்றும் மூன்று நாட்கள் தாவர உண்ணிகள் கணக்கெடுக்கப்பட்டு வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும் குறிப்பாக தாவர உண்மைகள் கணக்கெடுப்பில் யானைகள் மான் காட்டெருமை உள்ளிட்ட விலங்குகளை எச்சங்கள் நகைக்கீறல்கள் வனவிலங்குகளின் வழி பாதைகளிலும் தொலைநோக்கு பார்வை கொண்ட கேமராக்கள் மூலம் மலைகளில் தென்படும் விலங்குகள் குறித்தும் மேலும் செல் போனில் தென்படும் விலங்குகள் குறித்து பதிவு

செய்யப்படுகிறது பொள்ளாச்சி வனச்சரகர் ஞானபாலமுருகன் கூறுகையில் ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிகளில் பொள்ளாச்சி வால்பாறை மானாம்பள்ளி உலாந்தி உள்ளிட்ட வனப்பகுதிகளில் வருடம் தோறும் புலிகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது தற்போது பொள்ளாச்சி வனச்சிறப்பு பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பு பணி தொடங்கி நடைபெற்று வருகிறது மூன்று நாட்கள் மாமிசம் உன்னிகள் மற்றும் தாவர உண்ணிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும் இதில் புலி, சிறுத்தை, கரு சிறுத்தை, யானைகள் காட்டெருமைகள் மான் இன வகைகள் என வனவிலங்குகளின் நடமாட்டம் வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி கேமராக்கள் பதிவு செய்யப்பட்டு உள்ள விலங்குகள் சேர்த்துக் கொள்ளப்படுகிறது என தெரிவித்தார்

error: Content is protected !!