ஐதராபாத்- சென்னை இடையே இயக்கப்படும் சார்மினார் எக்ஸ்பிரஸ் நேற்று இரவு ஐதராபாத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் சிங்கராயா கொண்டா மற்றும் கவாலீடையே ரயில் வந்து கொண்டிருந்தபோது எஸ்.1, எஸ்.2 பெட்டிகளில் கொள்ளையர்கள் புகுந்தனர். அவர்கள் ஆயுதங்களை காட்டி நகை, பணத்தை கொள்ளையடித்தனர். இதுபோல சென்னை நோக்கி வந்த இன்னொரு விரைவு ரயிலிலும் கொள்ளை நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஆந்திர ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0