Skip to content
Home » தேவகவுடா பேரன் பிரஜ்வல் மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு

தேவகவுடா பேரன் பிரஜ்வல் மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.பி-யுமான பிரஜ்வல் ரேவண்ணா .  இவர் யார்  என்றால் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன்.  மதசார்பற்ற  ஜனதா தளம் கட்சி கர்நாடக மாநிலத்தின் ஒரு பகுதியில் செல்வாக்கு உள்ள கட்சியாகத்தான் இருக்கிறது.    தற்போது எம்.பியாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தற்போதும்  ஹசன்  தொகுதியில் பாஜக  கூட்டணியில் போட்டியிடுகிறார். இவரது  தொகுதியில் கடந்த 26ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்து விட்டது. அன்றைய தி்னம்  பிரஜ்வல் மற்றும் அவரது தந்தை ரேவண்ணா மீதான பாலியல் அத்துமீறல் வீடியோக்கள், போட்டோகள் வெளியாகி கர்நாடகத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவையே கலங்கடித்து  விட்டது.

இது குறித்து கர்நாடக மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் தந்தை ரேவண்ணா, மகன் பிரஜ்வல் ஆகியோர் இன்று வி்சாரணைக்கு ஆஜர் ஆகவேண்டும் என போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் பிரஜ்வல் யாருக்கும் தெரியாமல் வெளிநாடு தப்பி ஓடிவிட்டார். அதே நேரத்தில் அவர் தனது எக்ஸ் வலைதள பதிவில் விசாரணையை என் வழக்கறிஞர் மூலம் சந்திப்பேன் என கூறி இருந்தார்.

இந்த நிலையில் பிரஜ்வல் மீது மேலும் ஒரு பெண் இன்று பாலியல் புகார் அளித்துள்ளார். அதன் மீதும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!