அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் ரேணுகாதேவி. இவர் தற்போது பாண்டிச்சேரியில் வசித்து வருகிறார் ,இந்நிலையில் ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் ரேணுகாதேவி கடந்த 18ம் தேதி ஒரு மனுஅளித்துள்ளார், அதில் தனக்கு சொந்தமான சர்வே எண் 433/11 சார்ந்த நிலத்தில் 50 ஆண்டுகளாக உரிமையுடன் வைத்திருக்கிறோம் இதில் நிலத்திற்கு உரிய பட்டா எண் 8538 எங்களது பெயரில் நீண்ட காலமாக உள்ளது.
இந்த நிலம் சம்பந்தமாக தற்போது நீதிமன்ற வழக்கு நடைபெற்று வருகிறது .இந்நிலையில் தங்களுக்கு எந்த ஒரு முன்னறிவிப்பும் சட்டப்படி நோட்டீசும் வழங்காமல் சில நபர்களின் பெயர்கள் பட்டாவில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிந்து கொண்டோம் .பட்டாவில் சேர்க்கப்பட்டுள்ள பெயர்களை நீக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார் .
அப்போது நான் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தாசில்தாரிடம் வாக்குவாதம் செய்து தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார் .அப்பொழுது பணியில் இருந்த மண்டல துணை தாசில்தார் அந்த பெண்ணை தகாத வார்த்தைகளில் திட்டினாராம். இதனால் இருவருக்கும் இடையில் வாய் தகராறு ஏற்பட்டது-‘
இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்று மண்டல துணை தாசில்தார், ரேணுகா தேவி வைத்திருந்த செல்போனை பிடுங்கி தரையில் வீசி உடைத்து எறிந்தாராம். அந்த செல்போன் மதிப்பு ரூ. 40 ஆயிரம் . செல்போன் துண்டு துண்டாக உடைந்து போனது.
இது குறித்து ரேணுகாதேவி ஜெயங்கொண்டம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். துணை தாசில்தார் உடைத்த செல்போனை போலீசார் கைப்பற்றி விசாரிக்கிறார்கள். தாலுகா அலுவலகத்தில் ரேணுகாதேவி வாக்குவாதம் செய்த காட்சியின் சில பகுதிகளில் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.