Skip to content
Home » அரியலூர் அருகே கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது….

அரியலூர் அருகே கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது….

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காவல்துறையினர் கல்லாத்தூர் பாப்பாக்குடி பிரிவு சாலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து விசாரணை மேற்கொண்டதில் விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து கஞ்சா வைத்திருந்த கடலூர் மாவட்டம் வள்ளியம் பகுதியைச் சேர்ந்த வீரமணி, வேட்டக்குடி பகுதியைச் சேர்ந்த ராஜதுரை ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!