இணைய குற்றப்பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குனர் சந்தீப் மிட்டல் வழிகாட்டுதலின்படியும், திருச்சி மண்டல காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார் அறிவுறுத்தலின்படியும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின்படியும், காணாமல் போன மொபைல் போன்களை CEIR PORTAL- உதவியுடன் கண்டுபிடிக்க அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவு வழங்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், CEIR PORTAL உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்ட சுமார் ₹16 இலட்சம் மதிப்பிலான 153 மொபைல் போன்களை, 18.10.2025 இன்று மாவட்ட காவல் அலுவலகம் கொண்டுவரப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி, அதன்
உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். மேலும் பொதுமக்கள் செல்போன் தொலைந்து விட்டால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும். இணைய குற்றங்கள் க குறித்த புகார்களை இலவச உதவி எண் 1930 அழைக்கவும்,www.cybercrime.com.gov.in என்ற இணையத்தில் பதிவிடவும் அரியலூர் மாவட்ட இணைய குற்ற காவல் நிலையம் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் இரா.முத்தமிழ் செல்வன் அவர்கள் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்), துணைக் காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் (மாவட்ட குற்ற பதிவேடு கூடம்), காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.