கழகப் பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி.கே. பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க தமிழக முழுவதும் இன்று அதிமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
அதன்படி அரியலூர் மாவட்டம் செந்துறையில், தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக ஒன்றிய கழக செயலாளர் உதயம்.ரமேஷ் ஏற்பாட்டில் கட்சி அலுவலகத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்த கோடைகால நீர் மோர் பந்தலை
பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இளம்பை. இரா. தமிழ்செல்வன் கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி, வெள்ளரி பிஞ்சு உள்ளிட்டவைகளை வழங்கினர்.
இந்நிகழ்வில் சிதம்பரம் நாடாளுமன்ற வேட்பாளர் சந்திரகாசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பூவை.செழியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்