Skip to content
Home » அரியலூர் மூதாட்டி கொடூர கொலை…..

அரியலூர் மூதாட்டி கொடூர கொலை…..

அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகே உள்ள பார்ப்பனஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்னபட்டு(60). இவர் கணவரை பிரிந்து தனது மகனுடன் வசித்து வருகிறார்.  அன்னபட்டு சமத்துவபுரம் பகுதியில் குத்தகைக்கு நிலம் எடுத்து மக்காச்சோளம் பயிரிட்டு விவசாயம் செய்து வந்தார்.

நேற்று மாலை தனது தாயை காணவில்லை என மகன் விவசாய நிலத்திற்கு சென்று பார்த்துள்ளார்.அப்போது அன்னபட்டு தலையில் பலத்த ரத்த காயத்துடன் உயிரிழந்து கிடந்தார். இதனையடுத்து
கீழப்பழூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அன்னபட்டு கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் மோப்பநாய்,தடவியில் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

அன்னபட்டுவின் உடலை மீட்டு அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!