அரியலூர் மாவட்டம், கீழப்பழூர் அருகே உள்ள சாத்தமங்கலம் கோத்தாரி சர்க்கரை ஆலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா, நேரடியாக சென்று ஆய்வகத்தில் ஆல்கஹால் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள், அதனுடைய இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வின்போது கூடுதல்
காவல் கண்காணிப்பாளர் காமராஜ் அவர்கள் (மதுவிலக்கு அமல் பிரிவு), துணைக் காவல் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் (அரியலூர் உட்கோட்டம்), கீழப்பழூர் காவல் ஆய்வாளர் சகாய அன்பரசு அவர்கள், பழனிவேல்ராஜன் (GM) கோத்தாரி சர்க்கரை ஆலை, மெர்லி ஜோன்ஸ் அவர்கள் (HR), பாலகிருஷ்ணன் (PRO) உடனிருந்தனர்.