Skip to content
Home » விசிக கொடியை தீ வைத்து எரித்த நபர்களை கைது செய்யக்கோரி மறியல்….

விசிக கொடியை தீ வைத்து எரித்த நபர்களை கைது செய்யக்கோரி மறியல்….

  • by Senthil

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே குவாகம் கிராம பகுதியில் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் விசிக கொடிக்கம்பமும் உள்ளது. இதனிடைய நேற்று அம்பேத்கர் நினைவு தினம் கட்சி சார்பில் அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில், விசிக கொடி கம்பத்தில் வைக்கப்பட்டிருந்த கொடியை மர்ம நபர்கள் யாரோ சேதப்படுத்தி தீ வைத்து எரித்துள்ளனர். இதை அறிந்த வீசிக்க நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்து சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர் அப்போது விசிக கொடி சேதப்படுத்தி இருப்பது தெரிய வந்தது. இதில் ஆத்திரமடைந்த அக்கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் கூவாகம் கடைவீதியில்

திரண்டு மறியல் போராட்டம் நடத்தினர். கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இது பற்றி தகவல் அறிந்து வந்த குவாகம் போலீசார் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலந்து சென்றனர். மறியல் போராட்டம் காரணமாக குவாகம்-கொடுக்கூர் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!