Skip to content
Home » ஆயுதப்படை போலீஸ் விஷம் குடித்து தற்கொலை…..

ஆயுதப்படை போலீஸ் விஷம் குடித்து தற்கொலை…..

தேனி மாவட்டம், காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமையா. இவரது மகன் ஹரிகிருஷ்ணன்(30). இவர் திருப்பூர் மாநகர காவல்துறையில், ஆயுதப்படையில காவலராக பணிபுரிந்து வந்தார். மேலும், தனது மனைவி கிருஷ்ணப்பிரியா உடன் திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் தங்கி பணிக்கு சென்று வந்தார். இதனிடையே ஹரிகிருஷ்ணனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக கணவன் – மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஹரிகிருஷ்ணன் தனது மனைவியை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். சிறிது நேரத்திற்கு பின் கிருஷ்ணபிரியாவுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு, தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கிருஷ்ணபிரியா, இது குறித்து 15 வேலாம்பாளையம்  போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் மாயமான ஹரிகிருஷ்ணனை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை  திருப்பூர் வெங்கமேடுகுட்டை பகுதியில் ஹரிகிருஷ்ணன் அரளி விதையை குடித்து தற்கொலை செய்த நிலையில் சடலமாக கிடந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருமுருகன்பூண்டி போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!