Skip to content
Home » பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா 356 ரன் குவிப்பு… கோலி, ராகுல் சதம்…

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா 356 ரன் குவிப்பு… கோலி, ராகுல் சதம்…

  • by Senthil

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை, பாகிஸ்தானில் நடந்து வருகிறது. கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். ரோகித் சர்மா 56, கில் 58 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 24.1 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டத்தின் இடையே மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்த போட்டி இன்று மீண்டும் துவங்கியது. விராட் கோலியும், கே.எல்.ராகுலும் ஆட்டத்தை தொடர்ந்தனர். இருவரும் இறுதிவரை அவுட் ஆகாமல் அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர். 50 ஓவர் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் குவித்தது. கோலி 122 ரன்களும், ராகுல் 111 ரன்களும் குவித்தனர். கோலி தொடர்ச்சியாக பிரேமதாசா மைதானத்தில் அடித்த 4வது சதம் இதுவாகும். மேலும் ஒரு நாள் போட்டியில் 13,000 ரன்களையும் கோலி கடந்தார். 267 போட்டிகளில் விளையாடி இந்த ரன்களை கோலி எடுத்துள்ளார். பின்னர் 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!