புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் நகைக்காகச் சித்தி ரமணியைக் கொடூரமாகக் கொலை செய்த அக்கா மகன் பிரவீன் மற்றும் அவரது மனைவி ஈஸ்வரியைப் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சர்ப்ரைஸ் தருவதாகக் கூறி ரமணியின் கண்களைக் கட்டி, கம்பியால் குத்திக் கொன்ற பிரவீன், நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல் மனைவியுடன் கடலூரில் ‘ஜனநாயகன்’ சினிமா சென்றுள்ளார். தகவல் அறிந்த போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர்.
