திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகி குதிரை பேர வழக்கில் ஜாமீன் பெற்றார். நாளை முதல் சென்னை திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் காலை 10.30 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜா அளித்த புகாரின் பேரில் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது.
