கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ளது தனியார் பெண்கள் அழகு நிலையம் இந்த அழகு நிலையத்திற்கு நேற்று முன்தினம் 23 வயது ஒரு பெண் ஐப்ரோ சரி செய்ய சென்றுள்ளார். அதேபோல 40 வயது மதிக்கத்தக்க சங்கீதா என்ற பெண் ஹேர் கலரிங் செய்யவும் வந்துள்ளார். அப்போது 23 வயது பெண் அங்குள்ள இருக்கையில் முன்பக்கமாக சென்று அமர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து 40 வயது பெண் சங்கீதா எதற்காக வந்தாய் என வாக்குவாதத்தில் ஈடுபட்டு 23 வயது பெண்ணை
கண்ணம் கண்ணமாக அடித்து முடியை பிடித்து இழுத்து உள்ளார். கெட்ட வார்த்தையில் பேசியுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து அந்த பெண் கோவை ஆர் எஸ் புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் ஆர் எஸ் புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் 40 வயது பெண் சிட்டியில நாங்கள் பெரிய ஆட்கள் உன்னை கொன்று விடுவோம் என மிரட்டலும் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 40 வயது பெண் அந்த பெண்ணை அடிக்கும் சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி உள்ளது .