Skip to content
Home » தனிமை பெண்களுக்கு ”லிப் to லிப்”… சைக்கோவை தேடும் போலீஸ்…..

தனிமை பெண்களுக்கு ”லிப் to லிப்”… சைக்கோவை தேடும் போலீஸ்…..

  • by Senthil

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில், இளம் பெண் ஒருவரை மர்ம மனிதன ஒருவர் வலுக்கட்டாயமாக முத்தமிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் ஜாமுய்யில் உள்ள சதார்  ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வருகிறார். இச்சம்பவம் கடந்த மார்ச் 10 தேதி நடந்ததாகக் கூறப்படுகிறது. குற்றவாளி ஆஸ்பத்திரி சுவர் ஏறி குதித்துள்ளார். அந்த பெண் மொபைல் போனில் பேசிக்கொண்டு வந்துள்ளார். திடீரென அந்த மனிதன் அவரை கட்டிப்பிடித்து

வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்… அந்த மர்ம மனிதன் ஏன் ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் வந்தார் என்று எனக்குத் தெரியவில்லை. அந்த நபரை எனக்குத் தெரியாது.  ஆஸ்பத்திரி ஊழியர்களை அழைத்தேன் ஆனால், அதற்குள் அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். எல்லைச் சுவர் மிகவும் குறுகியதாக உள்ளது. ஆஸ்பத்திரிக்கு அடிக்கடி வரும் பெண்களை முள்வேலி அமைத்து பாதுகாக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் என கூறி உள்ளார். சீரியல் கில்லர் கேள்வி பட்டு இருப்போம் ஆனால் இவர் சீரியல் கிஸ்ஸர் இது போல் அடிக்கடி பெண்களுக்கு முத்தம் கொடுப்பதாக் புகார்கள் வந்து உள்ளதாக போலீசார் கூறி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!