Skip to content
Home » புதுவை பாஜக நிர்வாகி கொலை….திருச்சியில் கொலையாளிகள் சரண்

புதுவை பாஜக நிர்வாகி கொலை….திருச்சியில் கொலையாளிகள் சரண்

  • by Senthil

புதுச்சேரி மங்களம் தொகுதி பாஜக மாவட்ட பொறுப்பாளராக இருப்பவர் செந்தில் குமரன். இவர் வில்லியனூர் கனுவாப்பேட்டை பகுதியில் வசித்து வந்துள்ளார். செந்தில்குமரன் புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தவர்.

பாஜக பிரமுகரான செந்தில் குமரன் வில்லியனூர் பகுதியில் தனது வீட்டுக்கு அருகே பேக்கரி கடை ஒன்றில் நின்று கொண்டிருந்தபோது நேற்று இரவு  சுமார் 10 மணி அளவில் 7 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென அவர் மீது வெடிகுண்டு வீசி, கத்தியால் தாக்கிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!