சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில், கஞ்சா விற்பனை செய்து வந்த சரித்திர பதிவேடு குற்றவாளியும், பிரபல ரவுடியுமான வீரா மற்றும் அவரது நண்பர் விஜய் இடையே பணப் பிரிவினையில் ஏற்பட்ட தகராறில், விஜய், வீராவின் வீட்டு மீது நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றார். இதில் வீட்டின் முன்பகுதி சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக, வீட்டில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
