ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே, ஈஸ்வரமூர்த்தி என்பவரது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த மனோஜ் (16) என்ற சிறுவன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
