பிரேசிலின் பரானா மாகாணத்தில் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், லாரி டிரைவர், பஸ்ஸில் பயணித்த 2 குழந்தைகள் உள்பட 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்பு குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு ஹாஸ்பிடலில் அனுமதித்தனர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
