Skip to content
Home » இடைத்தேர்தல்… உபியில் சமாஜ்வாடி வெற்றிமுகம்…. பாஜக அதிர்ச்சி

இடைத்தேர்தல்… உபியில் சமாஜ்வாடி வெற்றிமுகம்…. பாஜக அதிர்ச்சி

  • by Senthil

உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட் மேற்குவங்கம், உத்தரகண்ட், கேரளம், திரிபுரா ஆகிய 6 மாநிலங்களில் 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது,இந்த தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று(வெள்ளிக்கிழமை) காலை நடந்தது.

இதில் கேரள புதுப்பள்ளி தொகுதியில் காங்கிரஸ்’  அமோக வெற்றி பெற்றுள்ளது. திரிபுராவில் போக்ஸ்நகர், தன்புர் ஆகிய இரு தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

ஆனால் பாஜகவின் கோட்டையான உத்தர பிரதேசத்தில் கோசி சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக பின்னடைவைச் சந்தித்துள்ளது. பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி, 16 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக வேட்பாளர் தாரா சிங்கைவிட சமாஜவாடி கட்சியின் வேட்பாளர் சுதாகர் சிங் 22,000 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை பெற்று வருகிறார்.

இதனால் கோசி தொகுதியில் சமாஜவாடி வெற்றி பெறும் சூழலே அதிகம் உள்ளது. இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

பாஜக வேட்பாளர் தாரா சிங் சௌகான் கடந்த 2022 தேர்தலில் சமாஜவாடி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர்  பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவுக்கு மாறியதால் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு அவர் அதில் தோல்வியைத் தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரடி பிரசாரத்தில் ஈடுபட்டும் வெற்றிபெற முடியாதது அங்கு பாஜகவுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!