கரூரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், காது கேளாத மற்றும் அறிவு சார்ந்த குறைபாடு உடைய குழந்தைகளுக்கான கல்வி சுற்றுலாவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் பிரபு சங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் 40க்கும் மேற்பட்ட பல்வேறு குறைபாடு உடைய குழந்தைகள் அரசு பேருந்தில் கரூர் மாவட்டத்தில் உள்ள மாயனூர் கதவனை பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு உள்ள இயற்கை அழகை ரசித்து மகிழவும், அங்கு அமைக்கப்பட்டுள்ள பார்க்கில் பல்வேறு விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தி அவர்கள் விளையாடுவதற்கும், மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள மீன் பூங்காவை
பார்வையிடுவதற்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார். குறைபாடு உடைய அந்த குழந்தைகள் ஆட்சியருக்கு கை அசைவில் தங்களது நன்றியை தெரிவித்தனர். இந்நிகழ்வில் மாற்றுத் திறனாளிகள் துறை அலுவலர் மற்றும் அரசு துறை அதிகாரிகள் குழந்தைகளின் பாதுகாவலர்கள் உடன் சென்றனர்.