Skip to content
Home » ஈரோட்டில் இதுவரை 9 பேர் வேட்புமனு தாக்கல்…

ஈரோட்டில் இதுவரை 9 பேர் வேட்புமனு தாக்கல்…

  • by Senthil

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்.27ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கியது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மராஜன் உள்பட 4 பேர் மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் இன்று தேமுதிக வேட்பாளர் ஆனந்த் மனு தாக்கல் செய்தார். மேலும் 4 சுயேட்சைகளும் இன்று மனு தாக்கல் செய்தனர். 2 நாளில் மொத்தம் 9 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் நாளைமறுதினம் வேட்புமனு தாக்கல் செய்கிறார். மனு தாக்கல் செய்ய வரும் 7ம் தேதி கடைசி நாளாகும். எனவே இனி வரும் நாட்களில் வேட்புமனு தாக்கல் விறுவிறுப்படையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!