கோவையில் வீடுகளில் கார் ஓட்டும் டிரைவராக ஆயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர் அவர்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் உண்டாகிறது நேரமின்மை காரின் உரிமையாளர் உணவு சாப்பிட சென்றாலும் இவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுப்பதில்லை .. டிரைவர் பணி அமர்த்திய உடன் உடனே நாயை வெளியில் கூட்டிச் செல்ல வேண்டும் தோட்டத்தில் நீரை ஊற்ற வேண்டும் காய்கறி பொருட்களை வாங்கி வர வேண்டும். வீட்டில் நான்கு கார்கள் இருந்தாலும் நான்கு கார்களையும் கழுவ
வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் டிரைவர்களுக்கு உண்டாகிறது.
கோவை சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் இவர் ஒரு வீடியோ பதிவை செய்துள்ளார் அது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அனைத்து டிரைவர்களுக்கு வணக்கம் நான் கோவையில் 40 வருடமாக கார் ஓட்டி வருகிறேன் எந்த உரிமையாளரும் எனக்கு உதவி செய்யவில்லை ஒரு சென்ட் இடம் வாங்க முடியவில்லை அடுத்த ஜென்மத்திலேயாவது அஜித்குமார் வீட்டில் கார் டிரைவர் ஆக இருக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து உள்ளார்