சென்னை தீவுத்திடல் பகுதியில் வரும் 9, 10ம் தேதிகளில் பார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த பந்தயத்தை வேறு இடத்தில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் 2 நாட்கள் பெய்த கனமழையால் சென்னை வெள்ளக்காடானது.
எனவே கார்பந்தயம் நடத்த முடியாத சூழல் உருவாகி உள்ளது. இதன் காரணமாக பார்முலா 4 கார்பந்தயம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.