2024 மக்களவைத் தேர்தலின்போது நெல்லை ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜரானார். நயினார் நாகேந்திரனின் நிறுவன ஊழியர்கள் ஆஜராகாததால் விசாரணை ஜூலை 16க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜூலை 16இல் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார். தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்ய முயன்றதாக நயினார் உள்ளிட்ட 13 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
