Skip to content
Home » புதுகையில் திருட்டு செல்போன்களை உரியவரிடம் ஒப்படைத்த எஸ்பி வந்திதா….

புதுகையில் திருட்டு செல்போன்களை உரியவரிடம் ஒப்படைத்த எஸ்பி வந்திதா….

புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே,  போலீஸ் ஸ்டேசன்களில் பதிவான தொலைந்து போன மொபைல் போன் வழக்குகளில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டிருந்தார். இதன் அடிப்படையில் பதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  ரமேஷ் கிருஷ்ணன் தலைமையில் கடந்த இரண்டு வாரங்களில் சைபர் கிரைம் போலீசார் மூலம் 105 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே இன்று 05.05.2023-ம் தேதியன்று உரிய நபர்களிடம் வழங்கப்பட்டது. இதற்கு முன்பு கடந்த ஆண்டுகளில் இரண்டு முறை 170 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம்

ஒப்படைக்கபட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே,  செல்போன் கண்டுபிடிப்பில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை நேரடியாக வரவழைத்து வெகுமதிகள் வழங்கி வெகுவாக பாராட்டினார்கள். மேலும் செல்போன் சம்மந்தமான புகார்களில் துரித நடவடிக்கை மேற்கொண்டு செல்போன்களை கண்டுபிடித்து உரிய நபர்களிடம் உடனடியாக ஒப்படைக்க காவல் கண்காணிப்பாளர்  உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!