வேலூரில் செல்போனில் பேசியவாறு பஸ்சை ஓட்டியவரின் லைசன்ஸ் 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. செல்போன் பேசியபடியே தனியார் பஸ்சை இயக்கிய டிரைவர் ராஜேஸ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அஜாக்கிரதையாக வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை பாயும் என மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் சாலை விதிகளை
மீறுபவர்கள் மீது சமீப காலமாக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது. சாலை விதிகளை பொதுமக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது.