Skip to content
Home » சிமெண்ட் தூண் சரிந்து விழுந்து மூதாட்டி பலி…. திருச்சி அருகே சம்பவம்…

சிமெண்ட் தூண் சரிந்து விழுந்து மூதாட்டி பலி…. திருச்சி அருகே சம்பவம்…

திருச்சி மாவட்டம் முசிறி தாலுக்கா ஆமூர் மேல தெருவை சேர்ந்தவர் 73 வய வயதான சரசு.இவர் பழுதடைந்த நிலையில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்ததால் மேலும் வீடு சேதமடைந்துள்ளது.இந்நிலையில் கடந்த 25 ம் தேதி இரவு வீட்டின் பின்புறத்தில் உள்ள ஆட்டு கொட்டகைக்கு சென்று ஆடுகளை பார்த்துவிட்டு மீண்டும் தான் வசிக்கும் வீட்டிற்கு சரசு வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்த சிமெண்ட் தூண் எதிர்பாராதமாக திடீரென சரிந்து மூதாட்டி மீது விழுந்தது.இதில் மூதாட்டி படுகாயமடைந்தார்.இவரின் அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டின் அருகில் இருந்தவர்கள் அதே பகுதியில் சற்று அருகில் குடும்பத்துடன் வசித்து வந்த மூதாட்டியின் மகன் பாலகணேசனுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த பாலகணேசன் மூதாட்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.  இது குறித்து அவரது மகன் வாத்தலை காவல் நிலையத்தில் கொடுத்த புகார் பேரில் வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரண செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!