Skip to content
Home » திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெண்ணிடம் செயின் பறிப்பு

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெண்ணிடம் செயின் பறிப்பு

  • by Senthil

லால்குடி அருகே நெய்குப்பை வடக்கு தெருவை சேர்ந்தவர் 40 வயதான ராஜேஸ்வரி். இவருடன் பணிபுரிபவர்  மண்ணச்சநல்லூர் வெங்கங்குடி பாலாஜி நகரை சேர்ந்த 34 வயதான விஜயலட்சுமி. இருவரும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள கேண்டினில் வேலை செய்து வருகின்றனர்.  நேற்று மாலை பணியை முடித்துக் கொண்டு  இருவரும் மோட்டார் பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கூத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் பல்சர் மோட்டார் பைக்கில் தலைக்கவசம் அணிந்து வந்த இரண்டு மர்ம நபர்கள் ராஜேஸ்வரி கழுத்தில் கிடந்த செயினை பறித்துள்ளனர். அப்போது அவர் கையில் பிடித்த போதும்,  மூன்று பவுன் மதிப்புள்ள செயினை பறித்துவிட்டு தப்பிச் சென்றனர்.

இது குறித்து ராஜேஸ்வரி கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!