Skip to content
Home » மணப்பாறை பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபர் ….. பொதுமக்கள் பிடித்து தர்ம அடி

மணப்பாறை பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபர் ….. பொதுமக்கள் பிடித்து தர்ம அடி

திருச்சி மாவட்டம் மணப்பாறை,  மணப்பாறைப்பட்டி சாலையில் வசிப்பவர் நாகராஜன், இவரது மனைவி  எழிலரசி.   அந்த பகுதியில் உள்ள கோவிலில் திருவிழா நடந்து வருகிறது.  பக்தர்கள் நேர்த்திக்கடனாக காலையில்  சாமிக்கு குடத்தில் தீர்த்தம் கொண்டு சென்று வழிபடுவார்கள். அதன்படி எழிலரசியும் தீர்த்தம் கொண்டு சென்று சாமியை வழிபட்டுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அங்குள்ள உதயம் சினிமா தியேட்டர் அருகே  எழிலரசியும், இன்னொரும்  பெண்ணும் நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது  பின்னால் தொடர்ந்து வந்துகொண்டிருந்த 30 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் திடீரென  எழிலரசி கழுத்தில் கிடந்த 7 பவுன்  செயினை பறிக்க  முயன்றார். அப்போது எழிலரசி உஷாராகி  நகையை பிடித்துக்கொண்டு  அந்த மர்ம நபருடன் போராடினார்.

செயின் கையில் கிடைக்காத ஆத்திரத்தில் அந்த  நபர்  எழிலரசியை கீழே தள்ளிவிட்டார். அதன்பிறகும் செயினை பறிக்க முயன்றார். அப்போது எழிலரசியும் உடன் வந்த பெண்ணும் கூச்சல் போட்டனர். இதைப்பார்த்து அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். நிலைமையை புரிந்து கொண்ட  அந்த வாலிபர் தப்பி ஓட பார்த்தார். ஆனால் அவர்கள்  அந்த வாலிபரை பிடித்து அங்குள்ள மின்கம்பத்தில் கட்டிவைத்து  தர்ம அடி கொடுத்தனர்.

உடனடியாக போலீசார் வந்து அந்த வாலிபர்  கைது செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.   விசாரணையில் நகை பறிப்பு திருடன் காரைக்குடி ராம்நகர், நாகராஜ் மகன் குழந்தைசாமி ( 36) என்பது தெரியவந்தது. நகை பறிக்கக முயன்ற வாலிபர் தள்ளி விட்டதாலும், நகைகை பிடித்துக்கொண்டு போராடியதாலும் எழிலரசிக்கு காயம் ஏற்பட்டது. அவரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!