Skip to content
Home » ஷேர் மார்க்கெட்டில் ரூ 3.50 லட்சம் இழந்த இளம் பெண் திடீர் மாயம்…..

ஷேர் மார்க்கெட்டில் ரூ 3.50 லட்சம் இழந்த இளம் பெண் திடீர் மாயம்…..

திருச்சி உறையூர் கீழ சாராயப்பட்டறை தெரு பகுதியைச் சேர்ந்தவர் பகலவன். இவரது மனைவி தாரணி ( 30). இவர் ஆன்லைன் ஷேர் மார்க்கெட்டில் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் முதலீடு செய்து நஷ்டம் அடைந்தார். பின்னர் இது பற்றி திருச்சி மாநகர சைபர் கிரைப் போலீசில் புகார் அளித்தார் . அதன் பின்னர் நேற்று வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து கணவர் பகலவன் உறையூர் போலீசில் புகார் செய்தார் . அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!