தென்னக ரயில்வேயின் முக்கிய வழித்தடங்களில் ஒன்றான செங்கோட்டை – மயிலாடுதுறை விரைவு ரயிலின் போக்குவரத்துப் பாதையில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ளவுள்ள அவசரத் தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, இந்த ரயிலானது வழக்கமான சில முக்கிய நிலையங்களைத் தவிர்த்து மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக செங்கோட்டை- மயிலாடுதுறை விரைவு ரயிலானது (16848) வரும் 25-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை, வழக்கமான வழித்தடமான வையம்பட்டி, மணப்பாறை ரயில் நிலையங்களை தவிர்த்து, காரைக்குடி திருச்சி ஜங்ஷன் வழியாக இயக்கப்படும். எனவே பயணிகள் தங்களது பயணத்திட்டங்களை முறையாக வகுத்துக் கொள்ளும்படி ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
