Skip to content
Home » சென்னை ஏர்போட்டில் சூட்கேஸில் ரூ.1.50 கோடி தங்கம் கடத்தல்….2 பெண்கள் கைது…

சென்னை ஏர்போட்டில் சூட்கேஸில் ரூ.1.50 கோடி தங்கம் கடத்தல்….2 பெண்கள் கைது…

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்நாட்டு விமானம், சென்னை உள்நாட்டு விமான நிலையம் டெர்மினல் 1-க்கு வந்தது. அந்த விமானத்தில் 2 பெண்கள், பெருமளவு தங்கம் கடத்தி வருவதாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சுங்க அதிகாரிகள், உள்நாட்டு முனையத்திற்கு வந்து, அந்த விமானத்தில் இறங்கி வந்த பெண் பயணிகளை கண்காணித்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த இரண்டு பெண் பயணிகள் மீது, சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதை அடுத்து 2 பெண் பயணிகளையும் நிறுத்தி விசாரித்தனர்.
அப்போது, அந்தப் பெண் பயணிகள், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் சுங்க அதிகாரிகள், நாங்கள் சந்தேகப்பட்டால் உள்நாட்டுப் பயணியாக இருந்தாலும், நிறுத்தி சோதனை போடுவோம் என்று கூறினர். அந்த இரண்டு பெண் பயணிகளை அவர்கள் உடமைகளுடன், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் உள்ள, சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவருடைய சூட்கேஸை திறந்து பார்த்து சோதனையிட்டனர். அந்த சூட்கேஸில் இருந்த ரகசிய அறையில், தங்க கட்டிகள் மற்றும் தங்க தகடுகள் இருந்ததை கண்டுபிடித்தனர். அதன் மொத்த எடை 2.4 கிலோ. அந்தத் தங்கத்தின் சர்வதேச மதிப்பு ரூ. 1.5 கோடி.

இதை அடுத்து 2  பெண் பயணிகளையும் சுங்க அதிகாரிகள் கைது செய்து,  ரூ. 1.5 கோடி மதிப்புடைய 2.4 கிலோ தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், 2 பெண் பயணிகளிடமும், சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!