Skip to content
Home » செல்போன் திருடிவிட்டு தப்பிக்க 3வது மாடியிலிருந்து குதித்த திருடன் பலி….

செல்போன் திருடிவிட்டு தப்பிக்க 3வது மாடியிலிருந்து குதித்த திருடன் பலி….

சென்னை சைதாப்பேட்டை சேஷாசலம் தெருவில் மூன்றாவது மாடியில் வசிப்பவர் மோகன்ராஜ். இவரும் இவரது நண்பர்கள் சிலரும் ஐந்து ஆண்டுகளாக இங்கு தங்கி வேலைக்கு சென்று வருகின்றனர். அறையில் தங்கி இருந்த இவரது நண்பர்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.

இந்த நிலையில் மோகன் ராஜின் நண்பர் ரஞ்சித் என்பவர் நேற்று வந்தார். நேற்று நள்ளிரவு  மூன்றாவது மாடியில் தங்கள் அறையின்  கதவை திறந்து வைத்து வெளியே தூங்கியதாகவும், 11.30 மணி அளவில்  பார்த்தபோது தங்களது அறையில் வெளிச்சம் தெரிந்ததாகவும் உள்ளே சென்ற பார்த்தபோது மர்ம நபர் ஒருவர், சார்ஜரில் போட்டிருந்த செல்போனை திருடிக் கொண்டு தப்ப முயன்றார் எனவும் மோகன்ராஜ் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

திருடன் திருடன் என்று சத்தம் போடவே மர்ம நபர் செல்போனை போட்டுவிட்டு  மாடியில் இருந்து குதித்து தப்ப முயன்றுள்ளார். அப்போது வீட்டின் ஸ்லாப் மற்றும் மரக்கிளையில் அடிபட்டு கீழே விழுந்து மயங்கினார். இதையடுத்து காவல் கட்டுப்பாட்டு‌ அறைக்கு தகவல் அளித்துவிட்டு ,திருட வந்த நபரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சைதாப்பேட்டை மருத்துவமனை அழைத்துச் சென்று, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தகவல் அறிந்த சைதாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நடத்திய விசாரணையில் இறந்த நபர் சைதாப்பேட்டை கோதாமேடை சேர்ந்த சேர்ந்த மணிகண்டன்(31) என்பது தெரிய வந்தது. மது அருந்திவிட்டு முதல்முறையாக திருட வந்தபோது இச்சம்பவம் நேர்ந்தது என போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!