Skip to content
Home » சென்னை, கரூரில் கனமழை…வெளுத்து வாங்கியது…

சென்னை, கரூரில் கனமழை…வெளுத்து வாங்கியது…

  • by Senthil

திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 2 தினங்களாக பகலில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இன்றும் கடுமையான வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் மாலை 3.45 மணி அளவில் கரூரில் பலத்த மழை பெய்தது. மாவட்டத்தின்  பிற பகுதிகளிலும்  இடி. மின்னல், காற்றுடன் மழை அடித்து பெய்தது. இதனால் நகரில் வெப்பம் தணிந்தது.

இதுபோல சென்னையிலும் இன்று மாலை 3.30 மணி அளவில் லேசாக தொடங்கிய மழை சிறிது நேரத்தில் பலத்த மழையாக பெய்யத்தொடங்கியது. சேப்பாக்கம், எழும்பூர், தாம்பரம், துரைப்பாக்கம், தரமணி , வேளச்சேரி உள்பட புறநகர் மற்றும் மாநகரில் கனமழை வெளுத்து வாங்கியது.  ெமரினா  கடற்கரை பகுதியிலும் மழை பலமாக பெய்தது.  திருச்சி மாநகரில் நேற்று இரவு கனமழை பெய்தது. மாவட்டத்தின் இதர பகுதிகளில் பரவலாக லேசான மழை பெய்தது. ஊட்டியிலும் கனமழை பெய்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!