Skip to content
Home » சென்னையில் கனமழை… கட்டட சுவர் இடிந்து 2 வாலிபர்கள் பலி….

சென்னையில் கனமழை… கட்டட சுவர் இடிந்து 2 வாலிபர்கள் பலி….

  • by Senthil

சென்னையில் ‘மிக்ஜாம்’ புயலால் நேற்று நள்ளிரவு முதல் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள், சாலைகளில் நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் இன்று காலை 10 மணி வரையிலும் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக அளவு கனமழையால் சென்னை மிதக்கும் நிலை ஏற்படும் என்ற அச்சம் மக்களிடையே உருவாகியுள்ளது. சென்னையின் பல பகுதிகளில் நேற்று இரவு முதலே மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை கானாத்தூர், ஈசிஆர் இந்திராகாந்தி தெருவில் புதியதாக கட்டடம் கட்டுமானப் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், மழையில் நனைந்திருந்த கட்டடத்தின் ஒருபக்கச் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அதில், கட்டடத்தினுள் தங்கியிருந்த ஜாகீர்(20), அப்ரோஸ்(30) ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!