நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை இயக்குநர் சேரன் ஆதரித்து முதல்முறையாக பிரசாரம் செய்துள்ளார். தனது எக்ஸ் தள பக்கத்தில், நமக்காக குரல் கொடுத்து சேவை செய்ய தகுதியானவர்களான இடும்பாவனம் கார்த்திக் (வேதாரண்யம்), கார்த்திகேயன் (பல்லாவரம்) ஆகியோரை வெற்றிபெற செய்ய வேண்டும். அப்போதுதான் எளிய மக்களுக்கான குரல் சட்டப்பேரவையில் பேசப்படும்; அரசின் காதுகளுக்கும் எட்டும் எனத் தெரிவித்துள்ளார்.
