சேலம் மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் விஜய் இன்று 3,000 கனஅடி தண்ணீரை திறந்து வைத்தார். வலது கால்வாய் மூலம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் நடந்த நீர் திறப்பு நிகழ்ச்சிக்கு பிறகு விவசாயிகளுடன் முதலமைச்சர் உரையாடினார். அவருக்கு நினைவுப் பரிவு வழங்கப்பட்டது. தொடர்ந்து அனைவருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் என்.ஆனந்த், விஜய் தமிழன் பார்த்திபன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
