தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை விமான நிலையம் வந்தடைந்தார் !!!
ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை வந்தடைந்தார். அவருக்கு தி.மு.க வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு
நாள் பயணமாக ஈரோடு, சேலம் மாவட்டங்களுக்கு பயணம் செய்கிறார். இதற்காக விமானம் மூலம் அவர் கோவை வந்தடைந்தார். விமான நிலையத்தில் மேளதாளங்கள் முழங்க அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை அடுத்து, அவர் கார் மூலம் ஈரோடு மாவட்ட பெருந்துறைக்கு புறப்பட்டு சென்றார். நாளை சேலம் செல்லும் அவர், மேட்டூர் அணை திறப்பு விழாவில் பங்கேற்கிறார்.