சென்னை, தி.நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.ஐ.டி. நகர் பிரதான சாலையை இணைக்கும் வகையில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் 164.92 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் 1.2 கி.மீ.
இந்த மேம்பாலத்தால் அந்த பகுதியில் இருக்கும் டிராஃபிக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மேம்பாலத்தின் கட்டுமான பணி ஜூன் 2023-ல் தொடங்கியது. ஆனால் சில காரணங்களால் திறப்பு கொஞ்சம் தள்ளிப்போனது. புர்கிட் சாலையில் இருந்து பழைய மேம்பாலம் வரை வேலை செய்ய போலீஸ் அனுமதி தேவைப்பட்டது. அந்த அனுமதி கிடைக்க தாமதமானதால் திறப்பு தள்ளிப்போனது.

